ADDED : ஜூலை 11, 2016 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செல்வம், அழகு, கல்வி வளம், உடல் வலிமை இவற்றால் மனிதன் சிறிதும் கர்வப்படக் கூடாது.
* அநியாயத்தை நியாயத்தாலும், அதர்மத்தை தர்மத்தாலும் வெற்றி கொள்ள முயல வேண்டும்.
* அறிவில் சிறந்தவர்கள் மற்றவர்களை இழிவாக நினைக்கவோ, அடிமையாக நடத்தவோ விரும்புவதில்லை.
* அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. அன்பு செய் என்று பிறரைக் கட்டாயப்படுத்துவது அவமானம்.
- பாரதியார்